Thursday, April 10, 2014

ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்








ஔவை துரைசாமி (செப்டம்பர் 5, 1902 - ஏப்ரல் 3, 1981) தமிழறிஞர். தமிழ் மொழி மேலிருந்த பற்றுதலின் காரணமாகத் தான் பார்த்து வந்த உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் பணியில் இருந்து விலகி, அதன்பின் தமிழ் கற்று தமிழறிஞராக உயர்ந்த பெருமைக்குரியவர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஔவையார் குப்பம் என்னும் சிற்றூரில், சுந்தரம் பிள்ளை - சந்திரமதி தம்பதிக்கு மகனாக 1902 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் பிறந்தார்.

தமிழை முறையாகப் பயில வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டார். கரந்தைத் தமிழ்ச்சங்கப் பள்ளியில், தமிழ்வேள் உமாமகேசுவரனால் ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். ஆசிரியப்பணி புரிந்து கொண்டே, தமிழ்ப்பாடம் பயின்று 1930 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக "வித்துவான்" தேர்வில் வெற்றி பெற்றார்.

மணிமேகலைக் காப்பியத்திற்குப் புத்துரை எழுதும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திடீரென்று இயற்கை எய்தி விட்டார். அதன் பின்னர், "கரந்தை கவியரசு" வேங்கடாசலம் பிள்ளையின் விருப்பத்திற்கிணங்க, மணிமேகலைக் காப்பியத்தின் இறுதி நான்கு காதைகளுக்கும் விளக்கவுரை எழுதிக் கொடுத்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் போது, சைவ சமய இலக்கிய வரலாறு, ஞானாமிர்தம் போன்ற அரிய நூல்களை எழுதினார். அந்நூல்கள் பல்கலைக்கழகத்தின் வெளியீடுகளாக வெளியிடப்பட்டன.[http://ta.wikipedia.org/s/lfo]


மின்னூல்கள்




 அனைத்து ஔவை துரைசாமி நூல்கள்:

    ஐங்குறுநூறு உரை
    ஒளவைத் தமிழ்
    சிலப்பதிகார ஆராய்ச்சி
    சிலப்பதிகாரச் சுருக்கம்
    சிவஞானபோதச் செம்பொருள்
    சிவஞான போத மூலமும் சிவஞான சுவாமிகள் அருளிய சிற்றுரையும்
    சீவக சிந்தாமணி ஆராய்ச்சி
    சீவக சிந்தாமணிச் சுருக்கம்
    சூளாமணி
    சைவ இலக்கிய வரலாறு
    ஞானாமிர்த மூலமும் பழைய உரையும்
    தமிழ்த்தாமரை
    தமிழ் நாவலர் சரிதை மூலமும் உரையும்
    திருமாற்பேற்றுத் திருப்பதிக உரை
    திருவருட்பா மூலமும் உரையும்(ஒன்பது தொகுதிகள்)
    திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை
    தெய்வப்புலவர் திருவள்ளுவர்
    நந்தாவிளக்கு
    நற்றிணை உரை
    பதிற்றுப்பத்து உரை
    பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு
    பரணர்
    புதுநெறித் தமிழ் இலக்கணம்(2 பகுதிகள்)
    புறநானூறு மூலமும் உரையும்(2 பகுதிகள்)
    பெருந்தகைப் பெண்டிர்
    மணிமேகலை ஆராய்ச்சி
    மணிமேகலைச் சுருக்கம்
    மதுரைக்குமரனார்
    மத்த விலாசம்(மொழிபெயர்ப்பு)
    மருள்நீக்கியார் நாடகம்(அச்சாகவில்லை)
    யசோதர காவியம் மூலமும் உரையும்
    வரலாற்றுக் கட்டுரைகள்(வரலாற்றுக் காட்சிகள்)
    Introduction to the Study of Thiruvalluvar
    பண்டை நாளையச் சேர மன்னர் வரலாறு
    தமிழ் நாவலர் சரிதை
    மதுரைக் குமரனார்
    வரலாற்றுக் காட்சிகள்
    தெய்வப் புலவர் திருவள்ளுவர்
    புது நெறித்தமிழ் இலக்கணம்
    பெருந்தகைப் பெண்டிர்
    ஊழ்வினை
    ஔவைத் தமிழ்
    தமிழ்த் தாமரை
    ஆர்க்காடு
    ஊர்ப்பெயர்-வரலாற்றாராய்ச்சி(அச்சாகவில்லை)










No comments:

Post a Comment