Monday, April 7, 2014

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்





குழந்தைகளுக்கான கவிதை எழுதுவதில் வல்லவரான அழ.வள்ளியப்பா பிறந்தது 1922 ஆம் வருடம் நவம்பர் மாதம் 7 ஆம் தேதி.  நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த இவர் தந்தை அழகப்பச் செட்டியார் தாய் உமையாள் ஆச்சி.  பெற்றோரால் சூட்டப்பட்ட பெயர் வள்ளியப்பன். பள்ளிப்படிப்பைத் தொடர்ந்து படிக்க முடியாமல் சென்னை சக்தி இதழில் வை. கோவிந்தன் என்பவரிடம் காசாளராகச் சேர்ந்தார்.  அங்கே தி.ஜ.ர.அவர்களின் ஊக்குவிப்பின் காரணத்தால் முதல் கதையை எழுதினார். பின்னர் இந்தியன் வங்கியில் சேர்ந்து வேலை பார்த்துக் கொண்டே எழுத்துப் பணியையும் தொடர்ந்தார். குழந்தை எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.  1989 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் தேதி மறைந்தார்.

http://ta.wikipedia.org/s/bmk
http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-35.htm

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்கள்

01. பாலர் பாடல்
02. சின்னஞ்சிறு வயதில்
03. சிட்டுக் குருவி
04. எக்காலத்துக்கும் ஏற்றக் கதைகள்
05. ஈசாப் கதைப் பாடல்கள்
06. எங்கள் கதையை கேளுங்கள்
07. குதிரைச் சவாரி
08. இனிக்கும் பாடல்கள்
09. கதை சொன்னவர் கதை
10. குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள் முதல் தொகுதி
11. குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள் இரண்டாம்
 தொகுதி
12. கேள்வி நேரம்
13. மலரும் உள்ளம் முதல் தொகுதி
14. மலரும் உள்ளம் இரண்டாம் தொகுதி
15. நல்ல நண்பர்கள்
16. நான்கு நண்பர்கள்
17. நேருவும் குழந்தைகளும்
18. நேரு தந்த பொம்மை
19. நீலா மாலா
20. பாடிப் பணிவோம்
21. பர்மா ரமணி
22. பாட்டிலே காந்தி கதை
23. பாட்டுப் பாடுவோம்
24. பெரியோர் வாழ்விலே முதல் தொகுதி
25. பெரியோர் வாழ்விலே இரண்டாம் தொகுதி
26. பிள்ளைப் பருவத்திலே!
27. ரோகந்தாவும் நந்திரியாவும்
28. ரோஜாச் செடி
29. சிரிக்கும் பூக்கள்
30. சின்னஞ்சிறு பாடல்கள்
31. சோனாவின் பயணம்
32. சுதந்திரம் பிறந்த கதை
33. திரும்பி வந்த மான் குட்டி
34. வாழ்க்கை விநோதம்
35. வெளிநாட்டு விடுகதைகள்
36. வேட்டை நாய்
37. விடுகதை விளையாட்டு
38. வித்தைப் பாம்பு

No comments:

Post a Comment