வணக்கம்.
நாடார்குல மித்திரன் மின்னிதழ் 1923ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என மூன்று வெளியீடுகளாக வெளிவந்துள்ளன.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும்....
முத்து நாடாரின் ....
நாடார்குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில் இன்று ...
1923 ம் ஆண்டு பிப்ரவரி 21 வெளிவந்த மூன்றாவது இதழ் (மலர் 4, இதழ் 18) மின்தொகுப்பில் இணைகின்றது.
இந்த இதழில் ...
பக்கம் 1:
வழக்கமான சௌந்தரகாந்தி நூல், அமரர் புராணம் நூல், ஆநந்தமகிளா, நாடார்குல மித்திரன் புத்தகசாலை நூல்களுக்கான விளம்பரங்களும், தூத்துக்குடி நவீன சுகபோஜன சாலை உணவு விடுதிக்கான விளம்பரமும் உள்ளன. இவற்றுடன், புதிய சேர்க்கையாக "புதிய இங்கிலீஷ் சம்பாஷணைப் புஸ்தகம்" என்ற விளம்பரம் ஒன்று ஆரணி திருநாவுக்கரசு பிரஸ் வெளியீடான மூன்று பாகங்கள் உள்ள இந்த நூலைப் படித்தால் மூன்று மாதங்களில் இங்கிலீஷில் சம்பாஷிக்கலாம் என்று கூறுகிறது.
பக்கம் 2:
தியாகராஜன் அல்லது திறமையுள்ள வாலிபன் (10 ஆவது பாகம்)
ஆத்மானந்த யோகீஸ்வரரான சுவாமி இராமதீர்த்தர், "கல்வி அபிவிருத்திக்கு பத்திரிக்கையே சிறந்த சாதனம்" என்று உரைத்த ஆழ்ந்த கருத்துள்ள உபதேசம் என்ற பகுதி; அமெரிக்க, இங்கிலாந்து நாடுகளில் பள்ளி செல்லாதவர்கள் கூட இந்தியக் கல்லூரிகளில் படித்த பட்டதாரிகளைவிட அதிக பொது அறிவுள்ளவர்களாக இருப்பதற்கு அந்நாட்டில் வெளியாகும் தினசரிப் பத்திரிக்கைகளே காரணம் என்கிறது (இந்தியா சுதந்திரம் பெற்றதற்கும், சமுதாய முன்நேற்றதிற்கும் பத்திரிக்கை வழி எழுச்சியூட்டும் கருத்துகள் பரவியதே காரணம் என்பதை நாமும் அறிவோம் அல்லவா?). உரையாற்றிவர் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் தனது உரையில் பெண்கல்வியை வலியுறுத்துகிறார்.
கிரிஷ்ணலீலை (தொடர் ...)
பக்கம் 3:
செய்தித்திரட்டு
கடிதங்கள்
ரசத்திரட்டு
பக்கம் 4:
தலையங்கம்: இந்து தேவஸ்தான பரிபாலன மசோதா
(சென்னை மாகாண சட்டசபையில் பரிசீலனையில் இருக்கும் மசோதாவைப் பற்றிய மிக விரிவான கருத்து அலசல் இடம் பெறுகிறது)
பக்கம் 5:
ஐரோப்பிய வர்த்தமானம்: பிரான்சுக்கும் ஜெர்மனிக்குமான எல்லைத்தகராறு விவகாரம், பாரீஸ் மகாநாடு, பிரான்சின் பிடிவாதம், பிரான்சின் படையெடுப்பு, ரூர் பிரதேசத்தின் நிலைமை ஆகியவற்றைப் பற்றிய செய்தி இடம்பெறுகிறது.
மிதவாதி, குக வேளாளர் பத்திரிக்கைகள் பற்றிய மதிப்புரைகள்
பக்கம் 6:
பர்மா வர்த்தமானம்: கல்வி அபிவிருத்தி சங்கத்தின் பொதுக்கூட்டம் பற்றிய செய்தி
நாடார்குல சங்கங்கள் பற்றிய செய்திகள்
பக்கம் 7:
இலங்கை வர்த்தமானம் (இலங்கை நிகழ்வுகள்)
பர்மா பயணத்தில் பத்திரிக்கை ஆசிரியருக்கு பர்மாவில் வழங்கப்பட்ட வரவேற்புரை
.......... ஆகியவை இடம் பெற்றுள்ளன.
நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்