Wednesday, September 9, 2015

நாடார்குல மித்திரன் - 1923 - பிப்ரவரி மாதத்தின் 2 வது இதழ்




வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின்னிதழ்  1923ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என  மூன்று  வெளியீடுகளாக  வெளிவந்துள்ளன.

நாடார்குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
1923 ம் ஆண்டு பிப்ரவரி 11  வெளிவந்த இரண்டாவது   இதழ் (மலர் 4, இதழ் 17)  மின்தொகுப்பில் இணைகின்றது.

இந்த இதழில் ...

பக்கம் 1:
வழக்கமான சௌந்தரகாந்தி நூல்,  அமரர் புராணம் நூல்,  ஆநந்தமகிளா,  நாடார்குல மித்திரன் புத்தகசாலை நூல்களுக்கான விளம்பரங்களும்,  தூத்துக்குடி நவீன சுகபோஜன சாலை உணவு விடுதிக்கான விளம்பரமும் உள்ளன. இவற்றுடன்,  புதிய சேர்க்கையாக "புதிய இங்கிலீஷ் சம்பாஷணைப் புஸ்தகம்" என்ற விளம்பரம் ஒன்று ஆரணி திருநாவுக்கரசு பிரஸ் வெளியீடான மூன்று பாகங்கள் உள்ள இந்த நூலைப் படித்தால் மூன்று மாதங்களில் இங்கிலீஷில் சம்பாஷிக்கலாம் என்று கூறுகிறது.

பக்கம் 2:
இலங்கை வர்த்தமானம் (இலங்கை நிகழ்வுகள்)
கிரிஷ்ணலீலை (தொடர் ...)
கைத்தொழிலே செல்வம் (கட்டுரை)

பக்கம் 3:
பர்மா வர்த்தமானம்
கடிதங்கள்
செய்தித்திரட்டு

பக்கம் 4:
தலையங்கம்: அங்கும் இங்கும் எங்கும் உள்ள மனோபாவங்கள்
குறிப்புகள்

பக்கம் 5:
நூல் பத்திரிக்கை மதிப்புரைகள்
ஹிந்து தேவஸ்தான பரிபாலன மசோதா
ஐரோப்பிய வர்த்தமானம்: யுத்த முஸ்தீப்புகள், சமாதன மகாநாடு முறிந்துவிட்டது

பக்கம் 6:
உபாத்திமைத் தொழிலும் சில உயர் இலட்சியங்களும் (கட்டுரை)
நாடார் மகாமண சங்கமும் பிரசாரமும்சிற்சில தமிழக செய்திகள்

பக்கம் 7:
கல்வி (தொடர் ...)
குடும்பமும் அதன் பயனும் (கட்டுரை)
விடாமுயற்சி (கட்டுரை)

ஆகியவை இடம் பெற்றுள்ளன.


நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்

No comments:

Post a Comment