Sunday, April 17, 2016

தமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 5 & 6

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
நான்காம் ஆண்டு:  (1928-1929) துணர்: 4   மலர்: 5 & 6

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

நான்காம் ஆண்டு: 1928-1929
துணர்: 4   மலர்: 5 & 6


1. இராசராசன் (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[இராஜராஜ சோழனின் அளவைகள், குற்றங்களுக்கான தண்டனைகள், அரச சட்டங்களை நிலைநிறுத்த உதவிய அதிகாரிகள் குழுமம்  ஆகியன பற்றிய அரியத் தகவல்கள் தொல்லியல் சான்றுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன]

2. குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[ஓட்டக்கூத்தரின் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழில் பாடப்படும் சோழ மன்னர், கம்பரையும் சேக்கிழாரையும் ஆதரித்த இரண்டாம் குலோத்துங்கன், இந்த இலக்கியத்தை இலக்கிய நயம் பாராட்டும் கட்டுரை]

3. தன்னலமும் பொதுநலமும் - ஓர் இனிய உரையாட்டு 
-- அ. வரத நஞ்சைய பிள்ளை
[தன்னலத்திற்கும் பொதுநலத்திற்கும் இடையே நிகழும் சுவையான ஒரு உரையாடல்]

4. தமிழகத்துப் பண்டைத்தமிழ் மக்களும், தனித்தமிழ் மொழியும்
-- K. சோமசுந்தரம் பிள்ளை, சட்டக் கல்லூரி மாணவர்
[பண்டைய தமிழிலக்கிய இலக்கண நூல்கள் காட்டும் தமிழர் வாழ்வு முறை பற்றிய ஆய்வுக் கட்டுரை]

5. பாட  வேறுபாடுகள்
-- அ. கந்தசாமிப் பிள்ளை
[பாட நூல்களில் பிழைகள்... எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான், உரைகாரன் இரண்டையும் கெடுத்தான் என்பது புதுமொழி...பாடநூல்களில் காணப்பெறும் பிழைகள் பலவும் பட்டியலிடப்படுகிறது]

6. குமரகுருபரவடிகளும், அவர் நூல்களும்  (தொடர்ச்சி...)
-- இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[குமரகுருபரர் வாழ்க்கை  வரலாறு, அவர்   படைப்புகளின் இலக்கிய நயம் பாராட்டல்]

7. பாண்டியர் வரலாறு
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[பாண்டியர்களின் தொன்மை, கடைச்சங்கக் காலத்துப் பாண்டியர்கள், இலக்கியம் வழி நாமறியும் பாண்டியர்கள்...இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

8. பதி பசு பாசப் பனுவல்  (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[மறைஞானசம்பந்தர் இயற்றிய சைவசித்தாந்தம் உணர்த்தும் நூல்களுள் ஒன்று, பிரமாண வியல் ]

9. கண்ணகியும் மாதவியும்
--இராம. மாணிக்கவாசகம் பிள்ளை
[கண்ணகியும் மாதவியும் கோவலனுக்கு உறவு முறையில் ஒரே உரிமை கொண்டவரா அல்லது சமூகப் பார்வையில் ஏற்றத் தாழ்வு உண்டா என்ற ஆய்வின் முடிவு, ஒரு தொடர் கட்டுரை ]

10. பஞ்சாபகேசன்
-- கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி வெளியீடு
[கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி வெளியீடுகளின் பட்டியல்

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment