Sunday, April 24, 2016

தமிழ்ப் பொழில் (1929-1930) துணர்: 5 மலர்: 3

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஐந்தாம்  ஆண்டு: (1929-1930) துணர்: 5   மலர்: 3

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஐந்தாம்  ஆண்டு: 1929-1930
துணர்: 5   மலர்: 3


1. உயிர்ப்பண்புகளும் வீட்டு வாயில்களும் (தொடர்ச்சி...)
-- அ. வரத நஞ்சைய பிள்ளை
[அறிவும், சிந்தனையும், அதன் இயக்கங்களும்... சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் வீடு பேற்றிற்குரிய நால்வகைக் கருவிகள்  பற்றிய விளக்கங்கள்]

2. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் 16-6-1929 அன்று மாலை நடந்த பொதுமக்கள் கூட்டத்தின் முடிவுகள்
[கல்லூரிகளில் தமிழ்மொழிக் கல்வி (நாட்டுமொழிப் பயிற்சி) சிறக்க மாற்றங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன, கூட்டத்தினர் அனைவரும் ஒருமித்து ஏற்றுக் கொண்டனர்]

3. குமரகுருபரவடிகளும், அவர் நூல்களும்  (தொடர்ச்சி...)
-- இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[குமரகுருபரர் வாழ்க்கை  வரலாறு, அவர்   படைப்புகளின் இலக்கிய நயம் பாராட்டல்]

4. தமிழ்மொழியும் தமிழ்நாடும்
-- மு. வே. மா. வீ. உலகவூழியர்
[தமிழ் மொழியின், தமிழகத்தின்  பண்டைய நிலையையும்,  இன்றைய நிலையையும் இன்றையத்  தேவையையும் எடுத்துக் கூறும் கட்டுரை ]

5.  உணவு
-- இ. மு. சுப்பிரமணிய பிள்ளை
[நாம் ஏன் உண்ண வேண்டும்? பட்டினி பல நோய்களுக்கு மருந்து, உடல் செயல்பட உயிர் வாழ உணவு தேவை]

6. தமிழ்ப் புதுவாண்டு
--எம். எஸ். பூரணலிங்கம் பிள்ளை
[தமிழரின் தமிழ்ப் புது ஆண்டு துவங்குவது ஆவணி மாதம், தமிழர் இதை மறந்து விட்டனர்]

7. சில தனிச்செய்யுட்கள்
-- அ. கந்தசாமிப் பிள்ளை
[இலத்திவாடிச் சமீந்தார் R. சின்னசாமி ரெட்டியார் திருமுன் கூறியவை]


________________________________________________
நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


No comments:

Post a Comment