Sunday, June 26, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 3

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 3
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 3

_________________________________________________________


1. சகுந்தலை கதை
கோ. வைத்தியலிங்கம் பிள்ளை
[சகுந்தலை துஷ்யந்தன் கதை!   உரைநடையும், இடையிடையே பாடல்களாகவும் அமைந்த பதிவு. கட்டுரையின் முதல் பகுதியில் துஷ்யந்தனும் சகுந்தலையும் சந்தித்ததைத் தொடர்ந்து, கட்டுரையின் இப்பகுதியில் இயற்கை மணம் செய்து கொள்கிறார்கள். "என் அன்புருபி! என் மனைவிகளில் நீ என் மனக்கினிய குலக்கொடியாவாய், இது சரதம்" என்று வாக்களித்துப் பிரிகிறான் துஷ்யந்தன். இக்கட்டுரை தொடர்கிறது]

2. நெடுந் தொகைக் குறும்பொருள்
S. மாணிக்கவாசக முதலியார்
சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார். களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை என்ற முத்திறம் கொண்டவையாக  அகநானூற்றுப் பாடல்களை தொகுத்த மதுரை உப்பூரிகுடி கிழாரின்மகன் உருத்திரசன்மனார்  திறன்; ஐந்திணைப் பாடல்கள் யாவும் ஒரு குறிப்பிட்ட எண் அடிப்படையில்  தொகுக்கப் பட்டதால், பாடல் எண் குறிப்பிட்டாலே பாடலின் திணை கூற இயலும் அமைப்பு; பாடல்கள் இயற்றிய 145 நல்லிசைப் புலவர்கள்; தொகுப்பித்த பாண்டியன்  உக்கிரப் பெருவழுதியின் புலமை; ஆகியவற்றை விவரித்து, கடவுள் வாழ்த்துப் பாடல் துவங்கி, முதல் இரண்டு பாடல்களுக்கும்  தனது சிற்றுரைகளை  வரைகிறார் மாணிக்கவாசக முதலியார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

3.கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[3 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, வரைவிலக்கண விதிகள், அப்பியாசம்,  பொருள் விகற்பங்கள், வகுத்தல், இயற்கை வகுப்பு செயற்கை வகுப்பு ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

4. வரருசி கதை
R. பொன்னுசாமி பிள்ளை
வடமொழிப் புலவர் பாணினி முனிவர் எழுதிய 'அஷ்டாத்யாயீ' என்ற இலக்கண நூலுக்கு 'வார்த்திகம்' என்ற உரைநூலை எழுதியவர் வரருசி என்பவர். வரருசியாரின் வாழ்க்கை வரலாறு 'கதாசரித்சாகரம்' என்ற கதைநூலில் இடம்பெற்றுள்ளது. அக்கதையைத் தழுவி வரருசியாரின்  கதையை பொன்னுசாமி பிள்ளை எழுதியுள்ளார்.  முதல் மூன்று அத்தியாயங்கள் இப்பகுதியில் இடம் பெறுகின்றன.  இது ஒரு தொடர் கட்டுரை]

5. நயன நூல் நவநீதம்
S. அமிர்தலிங்கம் பிள்ளை
[ஐம்பொறிகளில் முக்கியத்துவம் வாய்ந்த கண் குறித்த கட்டுரை: கண்ணின் அமைப்பு, தொழில் என உயிரியல் அடிப்படை கொண்ட விளக்கங்களுடன் விழிகள் குறித்த விரிவான விளக்கக் கட்டுரை.  இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

6. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[கட்டணமின்றி கல்வி கற்றுவிக்கப்படும் கரந்தைக் கல்வி நிலையத்தில் திக்கற்ற மாணவர்களுக்கும் உணவு, உடை, உறையுள் ஆகியவற்றுடன் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது.  கல்விநிலையத்தின் பணி தொடரும் வண்ணம்  நன்கொடை வழங்கியவர்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டு, அவர்களுக்கு நன்றி நவிலப்பட்டுள்ளது]

7. மதிப்புரை
இதழாசிரியர்
[திருநெல்வேலி தமிழ்ச் சங்கத்தின் முத்திங்கள் வெளியீடான 'தமிழ்த்தாய்' இதழின் சிறப்பினைக் குறிப்பிட்டு மதிப்புரை வழங்கப்பட்டுள்ளது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment