Wednesday, July 27, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 2

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 2
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 2

_________________________________________________________

1. வல்வடுகு நான்கு  (தொடர்ச்சி ...)
K.S. சுந்தரம் பிள்ளை
[விஜயநகர மன்னர்களின் பிரதிநிதிகளாக ஆண்ட தஞ்சை நாயக்க மன்னர்கள் பற்றி சுந்தரம் பிள்ளை இக்கட்டுரையில் விவரிக்கிறார். கட்டுரையின் இப்பகுதி தரும் செய்திகள்:     பீஜப்பூர் சுல்தான் உதவியுடன் தஞ்சையை மீட்டத் தஞ்சை நாயக்கர் வாரிசான செங்கமலதாசை, பீஜப்பூர் சுல்தான் மறைவிற்குப்பின்னர் ஆட்சி ஆசை கொண்ட சுல்தானின் பிரதிநிதி தஞ்சை நாயக்கரை விரட்டியடித்துக் கவர்ந்து கொள்கிறார்.  தஞ்சையில் ஏற்பட்ட கலவரத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு  மராட்டிய மன்னர் சிவாஜி தஞ்சையைக் கைப்பற்ற, 17 ஆம்  நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தஞ்சை  மராட்டியரின் கைகளுக்கு மாறுகிறது என்ற வரலாற்றுத் தகவலும், நாயக்க மன்னர்களது இறைமாட்சி  இப்பகுதியில்  இடம் பெற்றுள்ளது]

2. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[4 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, முதல் நிலை பிரதானம், அந்நுவயக் காட்சியின் ஆதார உரைமொழி, மில்லின் உரைகள், நிலைமாற்றல், மாறுகோணிலை மாற்றம், தொடையலியல், கணித முறைகளை அந்நுவய முறையாகக் காட்டுதல் ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

3. வாழ் நாள் (தொடர்ச்சி ...)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[உடலுடன் உயிர் இணைந்து செயலாற்றும் காலமான 'வாழ் நாள்' குறித்த சிந்தனை; வாழ்நாள் குறித்த  கருத்தாக்கங்கள், இலக்கியம் கூறும்  விளக்கங்கள், உலகளாவிய தத்துவங்கள், செய்திகள், சான்றுகள்   ஆகியவற்றின் தொகுப்பு]

4. தமிழ்ப் பத்திரிக்கையின் வரலாறு (தொடர்ச்சி ...)
ப. கலியாணசுந்தரம் பிள்ளை
[பத்திரிக்கை வளர்ச்சிக்கு உதவுவது உரைநடை.  தமிழகத்தில் பத்திரிக்கைகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் வரலாற்றுப் பார்வையாக அறிமுகப்படுத்துகிறார் கலியாணசுந்தரம் பிள்ளை]

5. இந்தியாவும் சீனாவும்  (தொடர்ச்சி ...)
T.S. நடராசன்
[சீனப் பேராசிரியர் 'டான்-யுன்-ஷன்'   சாந்திநிகேதனத்தில் நிகழ்த்திய சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு- பண்டைய  காலம் தொட்டு சீனாவும் இந்தியாவும் கல்வி, மொழி ஆகியவற்றில் மேம்பட்டு உலகில் சிறந்து விளங்கியமை பற்றியும்; இரு நாடுகளின் பெளத்த மத நூல்கள் மற்ற  நாட்டைப் பற்றி குறிப்பிடுவதைப் பற்றியும்; வாழ்வியல் , மக்கள் கொண்ட நல்லொழுக்கப் பண்புகளின் ஒற்றுமை, கலைவளர்ச்சி, நாகரிகம் எனப் பலவற்றிலும்   தொடர்ந்து 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளும்  சிறந்து விளங்குவது பற்றியும்  விவரிக்கும் இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]


________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்



வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment