Wednesday, October 12, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 9

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 9
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 9

_________________________________________________________

1. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
முத்து சு. மாணிக்கவாசக முதலியார்
[சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார். ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் ஆற்றுவல் என்பது படச் சொல்லியது குறித்த   ‘‘வான மூர்ந்த வயங்கொளி மண்டிலம்  நெருப்பெனச் சிவந்த’’(அகநானூறு - 11) என்ற ஔவையார் பாடிய பாலைத் திணைப்பாடலுக்கு,  இக்கட்டுரையில் விளக்கம் தருகிறார்.   இது ஒரு தொடர் கட்டுரை]

2. கல்லாட நூலாராய்ச்சி
E.R. நரசிம்மஐயங்கார்
[எழுதிய ஆசிரியரால்  பெயர் பெற்ற நூல்களுள் ஒன்று 'கல்லாடம்', கல்லாடர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.  இப்பெயர் கொண்ட புலவர்  பலர் உள்ளனர்.   கல்லாடம் ஒரு கோவை நூல், சிவனின் 64 திருவிளையாடல்களில் 34னைக்  கொண்டு சிவன் புகழ் பாடும் நூல் இது. நம்பியாண்டார் நம்பியின் கருத்தை நிலைநாட்ட எழுந்த நூலென்ற கருத்து அடிப்படையில், அவர் வாழ்ந்த காலத்திற்குப் பின்னர் 11 ஆம் நூற்றாண்டு போல கல்லாடம் எழுதப்பட்டது எனவும் கருதலாம் எனக் கூறும் நரசிம்மஐயங்கார் திருவிளையாடல் புராணக் கதைகளைக் குறித்து விரிவான தமிழிலக்கிய ஆராய்ச்சியை முன் வைக்கிறார்.]

3. பழைய பாடற்றிரட்டு
L. உலகநாதப்பிள்ளை
[தஞ்சை சரஸ்வதி மகால் சுவடி நூலகத்தில் உள்ள,  பல பாடல்தொகுப்பு  நூல்களில் இருந்து திரட்டப்பட்ட, இதுவரை வெளிவராத பாடல்கள் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளார் L. உலகநாதப்பிள்ளை]

4. வள்ளல் அதியமான் நெடுமானஞ்சி  - நாடகம்
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[கடையேழு வள்ளல்களில் ஒருவனான அதியமானின் கதைக்கு நாடக வடிவம்  கொடுத்துள்ளார்  சிவ. குப்புசாமிப் பிள்ளை]

5. நூல் மதிப்புரை
இதழாசிரியர்
[நவம்பர் 1936 முதல் கும்பகோணத்தில் இருந்து, சாதி சமயக் கோட்பாடுகளால் நிகழும் சமூக சீர்குலைவை மக்களுக்கு உணர்த்தும் நோக்கில்  எளிய தமிழில் வெளியிடப்பட்ட "அறிவுக்கொடி" என்ற சமூகசீர்திருத்த  மாதஇதழ் பாராட்டப்படுகிறது, அதனைப் படித்துப் பயன் பெறுமாறு வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.]

6. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment